Thursday, May 25, 2023
Home தமிழகம் அலட்சியத்தால் அழுகும் நிலையில் 6,000 நெல் மூட்டைகள்

அலட்சியத்தால் அழுகும் நிலையில் 6,000 நெல் மூட்டைகள்

அரக்கோணம் அருகே அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் 6 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாற்று முளைத்துள்ளதாக விவசாயிகளை குற்றம் சாட்டியுள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எஸ்.கொளத்தூர் கிராமத்தில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

நிவர் புயலுக்கு முன்பே விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.

ஆனால், அதிகாரிகளின்  அலட்சியம் காரணமாக தற்போது வரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.

இதனால் விவசாயிகள் கொண்டு வந்து வைத்த நெல் மூட்டைகளின் மேலே தற்போது நாற்று வளர்ந்துள்ளது.

நெல் முட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து அழுகிப் போகும் நிலையில் உள்ளதால் விசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் முட்டைகள் இடைத்தரகர்கள் மூலமாக தான் கொள்முதல் செய்யப்படுவதாகவும் லஞ்சம் கொடுத்தால்தான் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்கள்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments