Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்க கோரிய வழக்கு - உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்க கோரிய வழக்கு – உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த அசோக்குமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள், காவல் துறை அதிகாரிகள் அதே மாவட்டதில் பணிபுரிய கூடாது என ஒரு நபர் ஆணையம் பரிந்துரையின் படி, தமிழக அரசு கடந்த 2000 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

2000 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் N.கிருபாகரன், B.புகழேந்தி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் ஏன் தற்போது வரை பதட்டமான சூழல் உள்ளது? தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments