Tuesday, March 21, 2023
Home இந்தியா பிரதமருடன் வெளிநாடு சென்றவர்கள் விபரம் தொடர்பான கோரிக்கை மறுப்பு

பிரதமருடன் வெளிநாடு சென்றவர்கள் விபரம் தொடர்பான கோரிக்கை மறுப்பு

பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறப்பு விமானத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களின் விவரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.

இந்த விவரங்களை கோரி, இந்திய விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

தகவல் தர முடியாது என விமானப்படை நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

விசாரணையில், இந்த விவரங்கள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பானது என்றும் எஸ்.பி.ஜி வீரர்களின் பட்டியல் ரகசியமானது என்றும் வாதிட்ட விமானப்படை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமரின் பயண விவரம் வராது என்றும் தெரிவித்தது.

எஸ்.பி.ஜி. வீரர்கள் பற்றிய தகவல்கள் வேண்டாம் என்ற மனுதாரர் தரப்பு, மற்ற விவரங்களை தெரிவிக்க தடையில்லை என கோரியது.

இதுதொடர்பாக பதிலளிக்க கோரிய நீதிமன்றம், மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments