Monday, September 25, 2023
Home இந்தியா பிரதமருடன் வெளிநாடு சென்றவர்கள் விபரம் தொடர்பான கோரிக்கை மறுப்பு

பிரதமருடன் வெளிநாடு சென்றவர்கள் விபரம் தொடர்பான கோரிக்கை மறுப்பு

பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறப்பு விமானத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களின் விவரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.

இந்த விவரங்களை கோரி, இந்திய விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

தகவல் தர முடியாது என விமானப்படை நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

விசாரணையில், இந்த விவரங்கள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பானது என்றும் எஸ்.பி.ஜி வீரர்களின் பட்டியல் ரகசியமானது என்றும் வாதிட்ட விமானப்படை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமரின் பயண விவரம் வராது என்றும் தெரிவித்தது.

எஸ்.பி.ஜி. வீரர்கள் பற்றிய தகவல்கள் வேண்டாம் என்ற மனுதாரர் தரப்பு, மற்ற விவரங்களை தெரிவிக்க தடையில்லை என கோரியது.

இதுதொடர்பாக பதிலளிக்க கோரிய நீதிமன்றம், மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments