Sunday, October 1, 2023
Home தமிழகம் எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள் - அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள் – அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் 15 ஆயிரம் குழந்தைகள் எடைகுறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

கடந்த செப் டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் முழுவதும் 15,807குழந்தைகள் எடை குறைவாகஇருப்பதாக கண்டறியப்பட்டது.

இவர்களில், 4,100 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட காரணத்தால் மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

மீதமுள்ள குழந்தைகளுக்கு முட்டை, கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகளை கொடுக்கும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ளும்போது 3 மாதத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்ற எடை வந்துவிடும் என்று அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments