Wednesday, March 29, 2023
Home தமிழகம் எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள் - அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

எடை குறைவாக 15 ஆயிரம் குழந்தைகள் – அங்கன்வாடி பணியாளர்களின் ஆய்வில் தகவல்

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் 15 ஆயிரம் குழந்தைகள் எடைகுறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று குழந்தைகளின் எடையை கண்டறியும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

கடந்த செப் டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் முழுவதும் 15,807குழந்தைகள் எடை குறைவாகஇருப்பதாக கண்டறியப்பட்டது.

இவர்களில், 4,100 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட காரணத்தால் மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

மீதமுள்ள குழந்தைகளுக்கு முட்டை, கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகளை கொடுக்கும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ளும்போது 3 மாதத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்ற எடை வந்துவிடும் என்று அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments