Friday, September 29, 2023
Home இந்தியா தெலங்கானாவில் அரசியல் கட்சி பிரிவால் மோதிக் கொண்ட உறவினர்கள் - துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்...

தெலங்கானாவில் அரசியல் கட்சி பிரிவால் மோதிக் கொண்ட உறவினர்கள் – துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயம்

தெலங்கானா மாநிலத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நடுத்தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

எம்.ஐ.எம். என்ற கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது மற்றும் அவரது உறவினர்கள் பல ஆண்டுகளாக அந்தக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் உறவினர் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பாரூக் அகமது தான் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டும் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் ஜமீர், மோத்தேசன், மன்னன் ஆகியோர் காயமடைந்தனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments