Tuesday, March 21, 2023
Home இந்தியா தெலங்கானாவில் அரசியல் கட்சி பிரிவால் மோதிக் கொண்ட உறவினர்கள் - துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்...

தெலங்கானாவில் அரசியல் கட்சி பிரிவால் மோதிக் கொண்ட உறவினர்கள் – துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயம்

தெலங்கானா மாநிலத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நடுத்தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

எம்.ஐ.எம். என்ற கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது மற்றும் அவரது உறவினர்கள் பல ஆண்டுகளாக அந்தக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் உறவினர் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பாரூக் அகமது தான் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டும் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் ஜமீர், மோத்தேசன், மன்னன் ஆகியோர் காயமடைந்தனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments