Sunday, March 26, 2023
Home பொது சென்னையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்பு

சென்னையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்பு

சென்னையில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து மயக்க மருந்து கொடுத்து பிச்சை எடுக்க பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. சாலை ஓரங்களில் இதுபோன்ற குழந்தைகளை மயக்கநிலையில் படுக்க வைத்து, நோய்வாய் பட்ட குழந்தைகளைப்போல காட்டி பிச்சை எடுக்கிறார்கள்.

சில பெண்கள் மயக்கமடைந்த குழந்தைகளை தங்களது குழந்தைகளைப் போல இடுப்பில் சுமந்தபடி, பசியால் வாடுவது போல காட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இது போன்ற கொடுமைகளை ஒழித்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போலீசார் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்கப்பட்டது. அந்த குழந்தைகளை, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து, மறு வாழ்விற்கு வழிவகை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபோல சென்னையில் காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட 4 குழந்தைகளையும் போலீசார் மீட்டனர். புகார் கொடுக்கப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் அந்த குழந்தைகள் உரிய பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments