Sunday, June 4, 2023
Home இந்தியா நாடு முழுவதும் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - அமைச்சர்...

நாடு முழுவதும் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் 3 கோடி பேருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்க் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க இருக்கிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்கள் உள்பட நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஒரு கோடி சுகாதாரத் துறையினருக்கும் 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு அதிகமானோருக்கும், 50க்கு குறைந்த வயதில் அதிகமான பாதிப்புடையோருக்கும் என 27 கோடி பேருக்கு அடுத்த ஆறுமாதங்களில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் கோ-வின் செயலியில் இதுவரை 75 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்த ஹர்ஷ்வரதன், மக்கள் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். போலியோ தடுப்பூசி வந்த போதும் இது போன்ற வதந்திகள் பரவின என்று சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர், இன்று போலியோ ஒழித்துக் கட்டப்பட்டது போல கொரோனாவும் நிச்சயமாக ஒழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments