Tuesday, May 30, 2023
Home வர்த்தகம் ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11 ஆயிரத்து 800 கோடி...

ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11 ஆயிரத்து 800 கோடி வருவாய்

ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 11 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரம் டன் எடையிலான நிலக்கரி, இரும்புத்தாது, உணவு தானியங்கள், சிமெண்டு உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில்வேக்கு 11 ஆயிரத்து 788 கோடியே 11 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments