Tuesday, May 30, 2023
Home இந்தியா வரும் தேர்தலில் வாக்குசீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் - என்.ஏ.கோன்

வரும் தேர்தலில் வாக்குசீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் – என்.ஏ.கோன்

சமதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எதிர்வரும் தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் பி.ஜே.பி பல சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவார்கள்.

ஏனென்றால் EVM மெஷின் பி.ஜே.பி யின் சொல்படி கேட்கும்.

EVM மெஷின் வேண்டாம், வாக்குச்சீட்டு வேண்டும் என்று எந்த எதிர்க்கட்சியும் வலியுறுத்தவில்லை. இந்த மௌனம் எமக்கு புரியவில்லை. இந்த தேர்தலில் அடி வாங்கிய பின்னர்தான் எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்வார்களா?

இன்னும் எதுவும் கடந்து போகவில்லை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாக்குசீட்டு வேண்டும் என்று முறையிடலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு தயாராகவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இதன் விளைவுகள் தேர்தலுக்கு பின் தெரியும்.

இந்தியாவில், மம்தா பேனெர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே மட்டுமே இதற்காக குரல் கொடுக்கிறார்கள்.

வாக்குசீட்டு முறைதான் மக்களுக்கு உத்திரவாதமானது என்பதை சமதா கட்சி வலியுறுத்துகிறது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments