சமதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்வரும் தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் பி.ஜே.பி பல சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவார்கள்.
ஏனென்றால் EVM மெஷின் பி.ஜே.பி யின் சொல்படி கேட்கும்.
EVM மெஷின் வேண்டாம், வாக்குச்சீட்டு வேண்டும் என்று எந்த எதிர்க்கட்சியும் வலியுறுத்தவில்லை. இந்த மௌனம் எமக்கு புரியவில்லை. இந்த தேர்தலில் அடி வாங்கிய பின்னர்தான் எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்வார்களா?
இன்னும் எதுவும் கடந்து போகவில்லை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாக்குசீட்டு வேண்டும் என்று முறையிடலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு தயாராகவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இதன் விளைவுகள் தேர்தலுக்கு பின் தெரியும்.
இந்தியாவில், மம்தா பேனெர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே மட்டுமே இதற்காக குரல் கொடுக்கிறார்கள்.
வாக்குசீட்டு முறைதான் மக்களுக்கு உத்திரவாதமானது என்பதை சமதா கட்சி வலியுறுத்துகிறது.