Wednesday, June 7, 2023
Home தமிழகம் பாதுகாப்புப்படை காவலரின் மனைவி, மகள் ரெயிலில் அடிபட்டு பலி

பாதுகாப்புப்படை காவலரின் மனைவி, மகள் ரெயிலில் அடிபட்டு பலி

குடியாத்தத்தை அடுத்த கே.வி. குப்பம் கீழ்விலாச்சூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லியில் மத்திய பாதுகாப்புப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (வயது 29) என்ற மனைவியும், நந்திதா (4) என்ற மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். அவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி 3 நாட்களுக்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தினார். அதன் பிறகு அவர்கள் புதிய வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.

ஜெயந்தி, தனது மகள் நந்திதாவுடன் விரிஞ்சிபுரம்-கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்து வந்து ஓரிடத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டையை நோக்கி சென்ற சரக்கு ெரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments