Thursday, December 7, 2023
Home தமிழகம் பாதுகாப்புப்படை காவலரின் மனைவி, மகள் ரெயிலில் அடிபட்டு பலி

பாதுகாப்புப்படை காவலரின் மனைவி, மகள் ரெயிலில் அடிபட்டு பலி

குடியாத்தத்தை அடுத்த கே.வி. குப்பம் கீழ்விலாச்சூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லியில் மத்திய பாதுகாப்புப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (வயது 29) என்ற மனைவியும், நந்திதா (4) என்ற மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். அவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி 3 நாட்களுக்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தினார். அதன் பிறகு அவர்கள் புதிய வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.

ஜெயந்தி, தனது மகள் நந்திதாவுடன் விரிஞ்சிபுரம்-கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்து வந்து ஓரிடத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டையை நோக்கி சென்ற சரக்கு ெரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments