Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்பாதுகாப்புப்படை காவலரின் மனைவி, மகள் ரெயிலில் அடிபட்டு பலி

பாதுகாப்புப்படை காவலரின் மனைவி, மகள் ரெயிலில் அடிபட்டு பலி

குடியாத்தத்தை அடுத்த கே.வி. குப்பம் கீழ்விலாச்சூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லியில் மத்திய பாதுகாப்புப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (வயது 29) என்ற மனைவியும், நந்திதா (4) என்ற மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். அவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி 3 நாட்களுக்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தினார். அதன் பிறகு அவர்கள் புதிய வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.

ஜெயந்தி, தனது மகள் நந்திதாவுடன் விரிஞ்சிபுரம்-கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்து வந்து ஓரிடத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டையை நோக்கி சென்ற சரக்கு ெரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments