Wednesday, March 29, 2023
Home இலங்கை சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சூரிச் மாநிலத்தின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகரின் சில்லறை கடையில் நாசிகள் என்று அடையாளமிடப்பட்டு வர்த்தகரை கடையினுள் வைத்து எரிப்பதாகவும் அவரது குழந்தைகள் தொடர்பிலும் அவரின் கடை கதவுகளில் வாசகங்கள் எழுதி மிரட்டல் விடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கடமையின் உரிமையாளர் இவ்விடயத்தை காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபோன்ற விடயங்களை சிங்களவர்கள் யாரும் செய்திருக்கலாம் என கருதுகின்றனர். சுவிஸில் வர்த்தக ரீதியில் தமிழர்கள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

அதுமட்டுமல்லாமல் தொழில் ரீதியில் ஐரோப்பியாவில் தமிழர்கள் அதிக அளவில் பல துறை சார்ந்த தொழில்கள் செய்கின்றமை அங்குள்ள அரசுகளையே உயர்வாக பார்க்க செய்துள்ளது. இப்படியான நிலையில் இவ்வகையான மிரட்டல்கள் பல்வேறு கோனங்களில் பார்க்கப்படுகின்றது.

உதாரணமாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் அங்கு புலம்ப்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகம், அதில் ஈழத்தமிழர்களின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments