Saturday, March 25, 2023
Home இந்தியா குஜராத்தில் ஆன்லைன் வகுப்பால் நடந்த கொடூர சம்பவம்

குஜராத்தில் ஆன்லைன் வகுப்பால் நடந்த கொடூர சம்பவம்

பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஜூம் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்துள்ளது.

அந்த ஆன் லைன் வகுப்பில் பில் 10 மாணவ மாணவிகள் தினமும் கலந்து கொண்டனர், அப்போது கடந்த வாரம் நடந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் திடீரென வெளியானது. இதனால் அந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதை பற்றி அந்த ஆசிரயரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, வகுப்பு தொடங்கியதும் யாரோ ஒருவர் மட்டும் ஜூம் ஆப்பை ஆன் செய்யாமல் அதை வீடியோவாக எடுத்து வேறு யாருக்கோ அனுப்புவதை கவனித்துள்ளனர்.

ஆனால், அந்த நபர் யாரென்று கண்டுபிடுப்பதற்குள் அவர் ஆன்லைனிலிருந்து போய் விட்டார். இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவிரும் அந்த மோசடி பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறினர்.

இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் உடனே ஆன்லைன் வகுப்பை ரத்து செய்தது. இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் வீடியோவை டார்க் வெப் சைட்டுக்கு விற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே சம்பவம் அதே பள்ளியில் ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்தது, அப்போதும் ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிய மாநில முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments