Tuesday, May 30, 2023
Home இந்தியா மராத்திய இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மேல் முறையீடு செய்க -...

மராத்திய இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மேல் முறையீடு செய்க – வைகோ

மராட்டிய மாநிலத்தில், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பது சமூக நீதியைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கின்றது.

இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வேலைவாய்ப்பில் 12 விழுக்காடு, கல்வியில் 13 விழுக்காடு, மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று மும்பை நீதிமன்றம் உறுதி செய்து இருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். அந்த வழக்கில், இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், எல்.என். ராவ், ஹேமந்த் குப்தா, ரவிந்திர பாட், எஸ். அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்திய அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி இருக்கின்றது.

இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகளும் வெவ்வேறு விதமாக நான்கு தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். ஐந்து நீதிபதிகளும்இணைந்து அளித்த ஒரு தீர்ப்பில்,

மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய ஜெ. கெய்க்வாட் ஆணையத்தின் அறிக்கையை ஏற்க முடியாது என அறிவித்து இருக்கின்றனர். ‘மராத்தியர்களான ஓ பி சி மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு அளிப்பது, அரசு அமைப்புச் சட்டத்தின் பிரிவு
14-க்கு எதிரானது என்றும், 1992-இல் இந்திர சாகானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக் கூடாது’

என்று சுட்டிக் காட்டி உள்ளனர்.

நீதிபதிகள் எல்.என். ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பாட் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில்,

“அரசு அமைப்புச் சட்டத்தின் 102-ஆவது திருத்தச் சட்டத்தில், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மாற்றங்கள் செய்ய, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது; மத்திய அரசின் பரிந்துரையில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின்படிதான் குடியரசுத் தலைவர் மாற்றங்களைச் செய்வார்; மாநிலங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும்; பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியலை மாநில அரசுகள் திருத்தி அமைக்க முடியாது”

என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் இருவரும்,

“சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் மாற்றம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் அதிகாரம் உண்டு என்றும், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் குறித்த பட்டியலை மத்திய அரசு புதிதாக வெளியிட வேண்டும்”

என்றும் தீர்ப்பு அளித்து உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டுள்ள, தீர்ப்பு சமூக நீதிக் கோட்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குவதுடன், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்து இருக்கின்றது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்புகளை வழஙகி இருக்கின்றார்கள்.

ஆனால், இதற்கு முன்பே தமிழ்நாட்டில், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரிமை நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றது. எனவே, தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து, எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்யலாம்.

எனவே, இதர பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு உரிமை மற்றும் மாநில அரசுகளின் உரிமையைப் பாதுகாக்கின்ற வகையில், இந்தத் தீர்ப்பை, கூடுதல் நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குக் கொண்டு வர, சமூக நீதியின் தாயகமாம் தமிழ்நாட்டில் பொறுப்பு ஏற்கின்ற தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ பொதுச் செயலாளர்,
ம.தி.மு.க

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments