Wednesday, June 7, 2023
Home இந்தியா மோடி காட்டிய "வித்தைகள்" காரணமாகவே கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டது - ராகுல் காந்தி

மோடி காட்டிய “வித்தைகள்” காரணமாகவே கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டது – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது.

பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். கொரோனா 2-வது அலை தாக்கும் என்று பலமுறை நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். நான் எச்சரிக்கை விடுத்த போது என்னை ஏளனம் செய்தார்கள்.

கொரோனாவை வீழ்த்தி விட்டதாக பிரதமர் மோடி மேடைகளில் பேசினார். மோடி காட்டிய “வித்தைகள்” காரணமாகவே இரண்டாம் அலை ஏற்பட்டது.

இந்தியாவில் காட்டப்படும் கொரோனா பலி எண்ணிக்கை பொய். மத்திய அரசு உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டது.

கொரோனா என்பது தொடர்ந்து உருமாற கூடிய வைரஸ். லாக்டவுன் தற்காலிக தீர்வு, வேக்சின் மட்டுமே நிரந்தர தீர்வு என்று கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments