Saturday, March 25, 2023
Home இந்தியா பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை - ப.சிதம்பரம்

பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை – ப.சிதம்பரம்

பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழுவோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெகாஸஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்ட தொடர் முடங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், வேவு பார்க்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “சட்ட விரோதமாக வேவு பார்க்கப்பட்டதால் மொத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் மாறியது என ஒருவர் சொல்லலமா என எனக்கு தெரியவில்லை. ஆனால், பாஜக வெற்றி பெறுவதற்கு அது உதவி புரிந்துள்ளது.

இதில், தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை காட்டிலும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை சிறப்பாக இருக்கும். ஏனெனில், இது அதிகாரம் படைத்தது” என்றார்.

பெகாஸஸ் விவகாரத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையே போதுமானது. நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவைப்படாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பியதற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு முழுவதும் பாஜக உறுப்பினர்களே உள்ளதால் இதில் விசாரணை நடத்த அவர்கள் அனுமதிப்பார்களா என எனக்கு சந்தேகமாக உள்ளது.

நாடாளுமன்ற குழுவின் விதிகள் கண்டிப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக, அவர்களால் ஆதாரத்தை வெளிப்படையாக பொதுவெளி வெளியிடமுடியாது. ஆனால், பொதுவெளியில் வெளியிடும் அதிகாரமும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரமும் கூட்டு குழுவுக்கு உள்ளது என்றார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments