Sunday, March 26, 2023
Home உலகம் ஈக்வடார் சிறைச்சாலையில் இருதரப்பினர் இடையே மோதல் - 24 பேர் பலி

ஈக்வடார் சிறைச்சாலையில் இருதரப்பினர் இடையே மோதல் – 24 பேர் பலி

குவைட்டோ

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாக்வாலி நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு குழுக்களாக உள்ளனர். அவர்களுக்குள் அவ்வப்போது கோஷ்டி மோதல்களும் அரங்கேறிவருகிறது.

இந்நிலையில் குயாக்வாலியில் உள்ள சிறைச்சாலையில் இன்று இருதரப்பு கைதிகள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. கைதிகள் இரு தரப்பினரும் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த இந்த மோதலில் மொத்தம் 24 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து சிறைச்சாலையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினர் இடையேயான மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மோதல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கபப்ட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments