Friday, September 29, 2023
Home இந்தியா இந்தியாவில் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்வு.

இந்தியாவில் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்வு.

புதுடெல்லி

உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என்ற சூழல் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அந்தந்த நாட்டு அரசால் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். பின்னர் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்த மக்கள் தானாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர்.

இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 25 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிராக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும் இதுவரை 68 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா இறப்பைத் தடுப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. 2-வது டோஸ் போட்டுக்கொண்டோருக்கு கொரோனாபாதிப்பு மற்றும் இறப்புக்கு எதிராக மொத்த பாதுகாப்பை (97.5%) வழங்குகிறது என்று புள்ளிவிபரம் கூறுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நான்கு பெரிய மாநிலங்களான குஜராத் (40%), மத்திய பிரதேசம் (27%), மராட்டியம் (26%), மற்றும் உத்தரபிரதேசம் (13.34% ) ஆகிய மாநிலங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 20 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments