Thursday, December 7, 2023
Home இந்தியா உரிமைக்காக எவ்வாறு போராடுவது என விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் - கெஜ்ரிவால்

உரிமைக்காக எவ்வாறு போராடுவது என விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் – கெஜ்ரிவால்

டெல்லி

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டத்தின் விளைவாக புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்கிடையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் (நவ.26) ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், உரிமைக்காக அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பது குறித்து விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் வெப்பம்-குளிர் மற்றும் மழை-புயலுடன் நிறைய சதிகளையும் சந்தித்துள்ளது. உரிமைக்கா அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பதை நாட்டு விவசாயிகள் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளனர். அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். விவசாய சகோதரர்களின் உத்வேகம், தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments