Friday, May 26, 2023
Home தமிழகம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த விரைவில் புதிய குழு.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த விரைவில் புதிய குழு.

சென்னை

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் முடிந்தது.
அதற்கு முன், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சு முடிந்திருந்தால், ஊழியர்களுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஒப்பந்த பேச்சு நடத்தப்படவில்லை. இடைக்கால நிவாரணமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சி அமைத்தது. ஆறு மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்காததால், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தை துவக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கி, பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதிகாரிகள் குழு இந்த நேரத்தில், ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்தினால் பிரச்னையாகும் என்பதால், ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தொழிலாளர் துறை கமிஷனர், போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் பணி துவங்கி உள்ளது. விரைவில், ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments