Saturday, March 25, 2023
Home தமிழகம் மின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி ஆகவில்லை - எடப்பாடி பழனிசாமி

மின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி ஆகவில்லை – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக  பேரவையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்து  பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினமும் 17 ஆயிரத்து 100  மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது என கூறினார். கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லை என அவர் புகார் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வராததால்தான் சில இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டது என்று தெரிவித்தார். மின் பற்றக்குறையை சமாளிக்க 3ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத அதிமுகவினர் அவையிலிருந்து  வெளிநடப்புச் செய்தனர்.

மின்சாரப் பராமரிப்பில் அரசுக்குப் போதிய திட்டமிடல் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments