Wednesday, June 7, 2023
Home தமிழகம் கொல்கொத்தா - கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் முன்பதிவில்லாமல் பயணிக்கும் வடமாநிலத்தவர்கள்

கொல்கொத்தா – கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் முன்பதிவில்லாமல் பயணிக்கும் வடமாநிலத்தவர்கள்

கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.

ரயில் சென்னை எழும்பூர் வரும்போது முனபதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பதிலாக, அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்துள்ளனர். இதனால் எழும்பூரிலிருந்து முன்பதிவு செய்த பயணிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

முன்பதிவு செய்தவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த நிலையிலும் வடமாநிலத்தவர்கள் – தமிழர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்த நிலையில் பெண்கள் மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி வரை செல்லும் வாராந்திர சிறப்பு இரயிலில் முனபதிவு செய்த பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் முன்பதிவில்லாமல் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments