தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, விஜயகாந்தின் வலது காலில் இருந்து 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.