பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆடுகள் விற்பனை படுஜோராக உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இன்று (7ம் தேதி) நடந்த வாரச்சந்தையில் விற்பனை களைகட்டியது.
15 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.
இங்கு வெறும் 5 மணி நேரத்திற்குள் சுமார் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.