Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்இரண்டு பிரீமியம் கட்டிய பின் இறந்த வாடிக்கையாளரின் வாரிசுக்கு ₹1கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

இரண்டு பிரீமியம் கட்டிய பின் இறந்த வாடிக்கையாளரின் வாரிசுக்கு ₹1கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆயுள் காப்பீடு செய்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வழங்க மறுப்பு தெரிவித்த தனியார் வங்கியை ரூ.1 கோடி வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குச்சிபாளையம் தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவர் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் தனியார் காப்பீடு நிறுவனத்தில் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளார்.
2020 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் முறையே பிரீமியம் தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் 2020 நவம்பரில் திடீர் உடல் நலக்குறைவால் சுதாகர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பு தொடர்பாக மருத்துவ அறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.

இறந்த சுதாகர், தான் செய்திருந்த ஆயுள் காப்பீட்டின் நாமினியாகு அவரது இளைய சகோதரர் பிரபுவை நியமித்திருந்தார். இதையடுத்து பிரபு, காப்பீடு நிறுவனத்தை அனுகி, தனது அண்ணன் செய்த அயுள் காப்பீடுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இறந்த சுதாகருக்கு ஏற்கனவே கிட்னி பாதிப்பு இருந்ததாகக் கூறி காப்பீடு தொகையை வழங்க தனியார் காப்பீடு நிறுவனம் மறுத்து விட்டது.

இதையடுத்து பிரபு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைத்தீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, விதிமுறைகளை முறையாக பின்பற்றியே காப்பீடு நிறுவனம் சுதாகருக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளது. இரண்டு மாதங்கள் பிரீமியம் தொகை முறையே காப்பீடு நிறுவனத்தால் பெற்றப்பட்டுள்ளது.

மேலும் சுதாகர் இயற்கையாகவே இறந்தார் என்பதற்கான மருத்துவ அறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்ல் காப்பீடு நிறுவனம், காப்பீடு தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

எனவே காப்பீடு நிறுவனம் இறந்த சுதாகரின் நாமினியான அவரது சகோதரர் பிரபுவிடம், காப்பீடு தொகையான ரூ.1 கோடி, மற்றும் காப்பீடு நிறுவனத்தின் சேவை குறைபாடு, புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்காக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

- Advertisment -

Most Popular

Recent Comments