Saturday, March 25, 2023
Home வர்த்தகம் இரண்டு பிரீமியம் கட்டிய பின் இறந்த வாடிக்கையாளரின் வாரிசுக்கு ₹1கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

இரண்டு பிரீமியம் கட்டிய பின் இறந்த வாடிக்கையாளரின் வாரிசுக்கு ₹1கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆயுள் காப்பீடு செய்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வழங்க மறுப்பு தெரிவித்த தனியார் வங்கியை ரூ.1 கோடி வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குச்சிபாளையம் தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவர் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் தனியார் காப்பீடு நிறுவனத்தில் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளார்.
2020 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் முறையே பிரீமியம் தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் 2020 நவம்பரில் திடீர் உடல் நலக்குறைவால் சுதாகர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பு தொடர்பாக மருத்துவ அறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.

இறந்த சுதாகர், தான் செய்திருந்த ஆயுள் காப்பீட்டின் நாமினியாகு அவரது இளைய சகோதரர் பிரபுவை நியமித்திருந்தார். இதையடுத்து பிரபு, காப்பீடு நிறுவனத்தை அனுகி, தனது அண்ணன் செய்த அயுள் காப்பீடுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இறந்த சுதாகருக்கு ஏற்கனவே கிட்னி பாதிப்பு இருந்ததாகக் கூறி காப்பீடு தொகையை வழங்க தனியார் காப்பீடு நிறுவனம் மறுத்து விட்டது.

இதையடுத்து பிரபு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைத்தீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, விதிமுறைகளை முறையாக பின்பற்றியே காப்பீடு நிறுவனம் சுதாகருக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளது. இரண்டு மாதங்கள் பிரீமியம் தொகை முறையே காப்பீடு நிறுவனத்தால் பெற்றப்பட்டுள்ளது.

மேலும் சுதாகர் இயற்கையாகவே இறந்தார் என்பதற்கான மருத்துவ அறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்ல் காப்பீடு நிறுவனம், காப்பீடு தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

எனவே காப்பீடு நிறுவனம் இறந்த சுதாகரின் நாமினியான அவரது சகோதரர் பிரபுவிடம், காப்பீடு தொகையான ரூ.1 கோடி, மற்றும் காப்பீடு நிறுவனத்தின் சேவை குறைபாடு, புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்காக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments