Sunday, May 28, 2023
Home தமிழகம் குமரியில் பிராத்தனை நடைபெறும்போதே தேவாலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர்

குமரியில் பிராத்தனை நடைபெறும்போதே தேவாலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர்

குமரியில் பிராத்தனை நடைபெறும்போது தேவாலயத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், லண்டன் மிஷன் சபை கடந்த 30 வருடங்களாக வீரபகுபதி என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை அமைதியாக பிராத்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தேவாலயத்துக்குள் புகுந்து ரகளை செய்துள்ளனர். மத கலவரத்தை குமரி மாவட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று குமரி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தின் அமைதியை சீர்க்குலைக்கும் இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது?

இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதால் குமரி மாவட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments