Saturday, December 9, 2023
Home பொது பழநி அருகே பண்ணையில் தீ விபத்து - 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி சாவு

பழநி அருகே பண்ணையில் தீ விபத்து – 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி சாவு

பழநி

பழநி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கர்ணன் (65). விவசாயி. தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிப்பண்ணையில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை விட்டுள்ளார். நேற்று அதிகாலை கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதில் இருந்த சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின. சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments