Monday, December 4, 2023
Home உலகம் அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கோல்டன் விசா - ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது

அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கோல்டன் விசா – ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது

அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இளம் தொழில் அதிபருமான தமிழகத்தை சார்ந்த டாக்டர். A.S. அப்துல் மாலிக் க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரபடுத்தி உள்ளது.

பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் மற்றும் பெரு முதலீடு செய்யும் தொழில் அதிபர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. லூலு யூஸுஃப் அலி, உலக புகழ் பெற்ற முன்னனி நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சரத்குமார், பார்த்திபன், விஜய் சேதுபதி, திரிஷா மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பத்து வருட கோல்டன் விசா வழங்கி கவுரவ படுத்தி வருகிறது.

இதை தொடர்ந்து அமீரக காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் A.S.அப்துல் மாலிக்-க்கு போலிஸ் உயர் அதிகாரி உமர் அல் மர்ஜூக்கி கோல்டன் விசாவை வழங்கி கவுரவ படுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு சர்வதேச வர்த்தக குழுமத்தின் தலைவரும், அமீரக திமுக அமைப்பின் தலைவர் அன்வர் அலி மற்றும் சர்வதேச வர்த்தக குழுமத்தின் பொதுச் செயலாளர் ஷாநவாஸ், செயலாளர் ராஜா அமீரக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பீர் முஹம்மது மற்றும் சிங்கப்பூர் ஹவுஸ் தொழில் அதிபர் அப்துல்லா, நஜீர் அஹமது மற்றும் முஹம்மது ஜர்ஜீஸ், கேரளாவைச் சார்ந்த அப்துல் காதர் ஷாஹ்ஜாத் மற்றும் அமீரக அரசாங்க அதிகாரிகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments