Friday, May 26, 2023
Home உலகம் அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கோல்டன் விசா - ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது

அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கோல்டன் விசா – ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது

அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இளம் தொழில் அதிபருமான தமிழகத்தை சார்ந்த டாக்டர். A.S. அப்துல் மாலிக் க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரபடுத்தி உள்ளது.

பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் மற்றும் பெரு முதலீடு செய்யும் தொழில் அதிபர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. லூலு யூஸுஃப் அலி, உலக புகழ் பெற்ற முன்னனி நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சரத்குமார், பார்த்திபன், விஜய் சேதுபதி, திரிஷா மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பத்து வருட கோல்டன் விசா வழங்கி கவுரவ படுத்தி வருகிறது.

இதை தொடர்ந்து அமீரக காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் A.S.அப்துல் மாலிக்-க்கு போலிஸ் உயர் அதிகாரி உமர் அல் மர்ஜூக்கி கோல்டன் விசாவை வழங்கி கவுரவ படுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு சர்வதேச வர்த்தக குழுமத்தின் தலைவரும், அமீரக திமுக அமைப்பின் தலைவர் அன்வர் அலி மற்றும் சர்வதேச வர்த்தக குழுமத்தின் பொதுச் செயலாளர் ஷாநவாஸ், செயலாளர் ராஜா அமீரக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பீர் முஹம்மது மற்றும் சிங்கப்பூர் ஹவுஸ் தொழில் அதிபர் அப்துல்லா, நஜீர் அஹமது மற்றும் முஹம்மது ஜர்ஜீஸ், கேரளாவைச் சார்ந்த அப்துல் காதர் ஷாஹ்ஜாத் மற்றும் அமீரக அரசாங்க அதிகாரிகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments