Thursday, May 25, 2023
Home தமிழகம் மாண்டஸ் புயலால் சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம் - முதற்கட்ட கணக்கீடு

மாண்டஸ் புயலால் சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம் – முதற்கட்ட கணக்கீடு

சென்னை

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே “மாண்டஸ்” புயல் கரையை கடந்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க வசதியாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் ராஜேந்திரன், துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் விடிய விடிய களப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டு நாட்களில் சென்னையில் 15 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்த நிலையிலும், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேக்கம் ஏற்படவில்லை. ஆனால், புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால், 400-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், 200-க்கும் மேற்பட்ட மரக்கிளைகளும் விழுந்தன. 150-க்கும் மேற்பட்ட தெரு மின் கம்பங்கள், 200-க்கும் மேற்பட்ட சாலைகள், 15-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.

சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை என 50,000-க்கும் மேற்பட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, சாலையில் விழுந்த மரங்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் உடனடியாக அகற்றப்பட்டன. எனவே, மாநகரப் பேருந்துகள், வாகனங்கள் இன்று (டிச.10) வழக்கம் போல் இயக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் சேதம் மதிப்பாக 700 கோடி ரூபாய் முதற்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின், மொத்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். சேதமடைந்த பகுதிகளில் உடனடி சீரமைப்பு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 400 மரங்கள் விழுந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் கணக்கில் வராமல் இருக்கலாம். அவற்றை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments