திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பண்டிகை வைஷ்ணவ பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.