இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த 198 இந்திய மீனவர்கள் நேற்று (மே 12) விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.