Monday, December 4, 2023
Home இந்தியா அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி - கார்கே கிண்டல்.

அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி – கார்கே கிண்டல்.

புதுடில்லி

அடுத்த ஆகஸ்ட் 15ல் இதே செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த காங்., தலைவர் கார்கே, ‛அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி’ எனக் கூறினார்.

இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என பேசினார்.

இதற்கு பதில் அளித்து, காங்., தலைவர் கார்கே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு மீண்டும் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றுவார். ஆனால் அவர் அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் என கூறினார்.

ஒவ்வொரு நபரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய செய்வது மக்கள் கையில் உள்ளது.

2024ல் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தை காட்டுகிறது.

சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல.

அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்று அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments