Tuesday, April 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 23 பேர் பலியானநிலையில், இதுவரை 836 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1,44,471 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். மேலும் 84,497 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments