சென்னை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். குறிப்பாக கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த பெண் யார் என? தெரிந்து கொள்வதற்காக 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.