யாழ்ப்பாணம்
இலங்கை விவசாய அமைச்சகத்தின் சார்பில் ஒரு வார விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் கடைகள் அமைத்துள்ளன. இலங்கை “பனை அபிவிருத்தி சபை” சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்கள் மக்களை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று. பனை மரத்தின் பயன்பாடுகளை மக்களுக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.