Tuesday, March 21, 2023
Home விளையாட்டு இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்-...

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்

இந்தூர்

இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று நடந்தது முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாகப் பந்து வீசியதால் ரன் எடுக்க முடியாமல் வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும், இஸ்லாமும் தலா 6 ரன்கள் எடுத்து  உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள். அதையடுத்து முகம்மது மிதுன் முகமது ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேச அணி 26 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது முஷ்பிகுர் ரஹீம்14 ரன்கள் மற்றும்  மொமினுல் ஹக் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தொடர்ந்து விளையாடிய வங்காள தேச  அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து இருந்தன.

அதையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே எதிர்கொள்ள முடியாத வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்நிலையில் இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 58.3 ஓவர்களில்  150 ரன்கள் எடுத்து ஆல்- அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments