Saturday, March 25, 2023
Home வர்த்தகம் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 170 கோடி டாலர் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 170 கோடி டாலர் அதிகரிப்பு

பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 7ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 170 கோடி டாலர் அதிகரித்து 47,300 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் 461 கோடி டாலர் அதிகரித்து 47,130 கோடி டாலராக இருந்தது.

ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர் மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

கணக்கீட்டுக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள இதர செலாவணிகளின் மதிப்பு 194 கோடி டாலர் அதிகரித்து 43,919 கோடி டாலராக இருக்கிறது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 22 கோடி டாலர் சரிவடைந்து 2,878 கோடி டாலராக உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 20 லட்சம் டாலர் குறைந்து 144 கோடி டாலராக இருக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 1.60 கோடி டாலர் குறைந்து 360 கோடி டாலராக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20), ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 3 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 3,880 கோடி டாலர் உயர்ந்தது. இதனையடுத்து முதல் முறையாக இவ்வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 45,000 கோடி டாலரை தாண்டியது. தற்போது 47,000 கோடி டாலரை தாண்டி இருக்கிறது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments