Monday, September 25, 2023
Home வர்த்தகம் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 170 கோடி டாலர் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 170 கோடி டாலர் அதிகரிப்பு

பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 7ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 170 கோடி டாலர் அதிகரித்து 47,300 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் 461 கோடி டாலர் அதிகரித்து 47,130 கோடி டாலராக இருந்தது.

ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர் மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

கணக்கீட்டுக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள இதர செலாவணிகளின் மதிப்பு 194 கோடி டாலர் அதிகரித்து 43,919 கோடி டாலராக இருக்கிறது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 22 கோடி டாலர் சரிவடைந்து 2,878 கோடி டாலராக உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 20 லட்சம் டாலர் குறைந்து 144 கோடி டாலராக இருக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 1.60 கோடி டாலர் குறைந்து 360 கோடி டாலராக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2019-20), ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 3 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 3,880 கோடி டாலர் உயர்ந்தது. இதனையடுத்து முதல் முறையாக இவ்வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 45,000 கோடி டாலரை தாண்டியது. தற்போது 47,000 கோடி டாலரை தாண்டி இருக்கிறது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments