Saturday, December 9, 2023
Home இந்தியா மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரையில், 881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் இயங்கி வரும் ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேர் கேரளாவில் இருந்து மும்பை சென்று தங்கி பணியாற்றிய செவிலியர்கள். மும்பையில் உள்ள அந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரிடம் இருந்து செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 150 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தாராவியில் குடியிருந்து, இந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments