Wednesday, June 7, 2023
Home இந்தியா மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரையில், 881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் இயங்கி வரும் ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேர் கேரளாவில் இருந்து மும்பை சென்று தங்கி பணியாற்றிய செவிலியர்கள். மும்பையில் உள்ள அந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரிடம் இருந்து செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 150 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தாராவியில் குடியிருந்து, இந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments