Tuesday, March 21, 2023
Home தமிழகம் வேலூர் சிறையில் முருகன் 20-வது நாளாக உண்ணாவிரதம் - உடல் நிலை மோசமடைந்து வருகிறது

வேலூர் சிறையில் முருகன் 20-வது நாளாக உண்ணாவிரதம் – உடல் நிலை மோசமடைந்து வருகிறது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், 20வது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தனது தாயுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்காத நிலையில், பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவி நளினியிடமாவது வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முருகனுக்கு இதுவரை 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

ஜீவசமாதி அடைய தொடர் உண்ணாவிரதம் இருப்பதால் முருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments