Sunday, October 1, 2023
Home தமிழகம் சாத்தான்குளம் மரணங்களுக்கு சி.பி.ஐ விசாரணை முடிவு எடுத்துவிட்டு நீதிமன்றத்தில் எதற்காக முறையிட வேண்டும்? -...

சாத்தான்குளம் மரணங்களுக்கு சி.பி.ஐ விசாரணை முடிவு எடுத்துவிட்டு நீதிமன்றத்தில் எதற்காக முறையிட வேண்டும்? – நீதிபதிகள்

மதுரை

சாத்தான்குளம் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது என கொள்கை முடிவு எடுத்துவிட்டு நீதிமன்றத்தில் முறையிடுவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போலீஸ் தாக்குதல் மரணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனை சாத்தான்குளத்தில் தங்கி விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, அரசு தரப்பில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. கொள்கை முடிவு எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் எதற்காக முறையிட வேண்டும்? என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினர் நீதிபதிகள்.

அத்துடன், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments