Wednesday, May 24, 2023
Home தமிழகம் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமார் காலமானார்

ஆகஸ்ட் 11 முதல் கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70. இன்று மாலை 6.58 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் இறக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசந்தகுமார் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தவுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான இரண்டாவது அரசியல் பிரமுகர் வசந்தகுமார் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments