Sunday, March 26, 2023
Home தமிழகம் கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்

நிவர் புயல் கரையைக் கடக்கவிருப்பதையொட்டிக் கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்றிரவு காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையொட்டிக் கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, சித்திரைப்பேட்டை, ஐயம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் வாழும் மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசு அதிகாரிகளின் அறிவிப்பை ஏற்றுக் கரையோரப் பகுதி மீனவர்கள் பள்ளிகள், அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்றுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

படகுகளை இன்னும் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல பொக்லைன், டிராக்டர்களை அனுப்பி உதவ வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதி தீவிரப் புயல் கரையைக் கடப்பதையொட்டிக் கடலூர் துறைமுகத்தில் பேரபாயத்தின் குறியீடாகப் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயலின் எதிரொலியாகக் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

இந்நிலையில் கடலூரில் கடற்கரையோரக் குடியிருப்புகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல நகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments