Wednesday, November 29, 2023
Home பொது நடிகர் சத்யராஜின் மகள் தேர்தலில் போட்டி

நடிகர் சத்யராஜின் மகள் தேர்தலில் போட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சத்யராஜின் மகள் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

வேறு எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் நிலவுகிறது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைந்த பிறகு, நடைபெறப் போகும் முதல் சட்டமன்ற தேர்தல் இது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான நடிகர் ரஜினி காந்தும், கமல்ஹாசனும் கூட இந்த தேர்தலில் குதிப்பதால், நிச்சயம் தமிழக வாக்காளர்களுக்கு புதிய அனுபவமாக வரும் சட்டமன்ற தேர்தல் இருக்கும்.

தமிழகத்தில், இப்படி நடிகர்கள் அரசியலில் குதித்து கொண்டிருக்கையில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக கருதப்படும் சத்யராஜின் மகள் திவ்யாவும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, “மகிழ்மதி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவி ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

ஊட்டச்சத்து குறைவாகவுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சத்துமிக்க உணவுகளை வழங்கி வலுமிக்க குழந்தைகளாக மாற்றும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள திவ்யாவுக்கு அரசியலில் ஈடுபட வேண்டுமென்பது நீண்ட கால ஆசை.

ஆனால், இதுவரை எந்த கட்சியிலும் திவ்யா சேரவில்லை.

அதே வேளையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திவ்யா போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் அரசியல் வாழ்க்கையில் தந்தையின் பெயரை, புகழை பயன்படுத்த மாட்டேன்.

ஆனால், என்னுடன் கை கோத்து தந்தை செயல்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தி.மு.க வுக்கு ஆதரவாக சத்யராஜ் பிரசாரத்தில் ஈடுபடப் பவதாக வதந்தி பரவியது.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சத்யராஜ், “என் மகளை தைரியமான பெண்ணாக நான் வளர்த்துள்ளேன். ஊட்டச்சத்து நிபுணராக தன் தொழிலில் வெற்றி பெற்றுள்ளார். என் மகளுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்” என்று கூறியுள்ளார்

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments