Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவிண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்

சி.எம்.எஸ் – 1 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது.

பிற்பகல் 3.41 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் ஏவப்பட்டது.

விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி, திட்டமிட்டபடி சுற்றுவட்டப் பாதையில் சி.எம்.எஸ் – 1 செயற்கைக்கோளை செலுத்தியது.

இதன் மூலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் 52 ஆவது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள சி.எம்.எஸ் – 1 இந்தியாவின் 42ஆவது தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். பேரிடர் மேலாண்மை, இண்டர்நெட் சேவை, தொலைநிலைக் கல்வி, டெலிமெடிசின் உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments