Saturday, March 25, 2023
Home இந்தியா பிரதமர் மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என OLX-ல் விளம்பரம் - 4 பேர் கைது.

பிரதமர் மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என OLX-ல் விளம்பரம் – 4 பேர் கைது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என்று ஓஎல்எக்ஸில் விளம்பரப்படுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாராணசி தொகுதியின் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்த குற்றவாளிகள், அதனை ஓஎல்எக்ஸ் என்ற இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

இந்த அலுவலகம், ஜவகர் நகர பகுதியில், பெலுப்பூர் காவல்நிலைய எல்லைக்குள் இருக்கிறது. இந்த நிலையில், இது குறித்த தகவல் நேற்று கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக வாராணசி காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பதக் கூறினார்.

உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.இதில் தொடர்புடைய நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினோம், அதில், அவர்கள்தான் அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்து ஓஎல்எக்ஸில்.பதிவிட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அமித் பதக் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments