Friday, September 29, 2023
Home இந்தியா பிரதமர் மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என OLX-ல் விளம்பரம் - 4 பேர் கைது.

பிரதமர் மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என OLX-ல் விளம்பரம் – 4 பேர் கைது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என்று ஓஎல்எக்ஸில் விளம்பரப்படுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாராணசி தொகுதியின் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்த குற்றவாளிகள், அதனை ஓஎல்எக்ஸ் என்ற இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

இந்த அலுவலகம், ஜவகர் நகர பகுதியில், பெலுப்பூர் காவல்நிலைய எல்லைக்குள் இருக்கிறது. இந்த நிலையில், இது குறித்த தகவல் நேற்று கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக வாராணசி காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பதக் கூறினார்.

உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.இதில் தொடர்புடைய நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினோம், அதில், அவர்கள்தான் அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்து ஓஎல்எக்ஸில்.பதிவிட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அமித் பதக் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments