Wednesday, March 29, 2023
Home தமிழகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சந்தேக நபர்கள் 1278 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சந்தேக நபர்கள் 1278 பேர் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி 116 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 149 துப்பாக்கிகளில், முக்கிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 32 துப்பாக்கிகள் தவிர 116 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய, கெட்ட நடத்தை மற்றும் சந்தேக நபர்கள் என சுமார் 1618 நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து, அதில் 1278 நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் 567 நபர்கள் எந்த பிரச்சனையிலும் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இதில் புதிதாக 98 குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத பணம் மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்க 18 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments