Wednesday, June 7, 2023
Home இந்தியா இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகம் முதலிடம்

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகம் முதலிடம்

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகம் முதலிடத்தை தொட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் முதலிடத்திலும் கேரளா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 33 ஆயிரத்து 59 பேருக்கும் கேரளாவில் 31 ஆயிரத்து 337 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா தொற்றில் 74 சதவிகிதம் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளையில், நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு விகிதம், 13.31 சதவீதம் ஆக சரிந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக, மூன்று லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments