Monday, June 5, 2023
Home இந்தியா கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் - ரவிக்குமார் எம்.பி

கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் – ரவிக்குமார் எம்.பி

இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளேன்

மதமாற்ற முயற்சி நடக்கிறது என்ற பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கிறித்தவ கல்வி நிறுவனங்களை அச்சுறுத்துகின்றனர். இது தொடர்பாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் விசாரிக்க வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன். அதன் விவரம் :

SC, ST மற்றும் OBC மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபடும் கிறித்தவ கல்வி நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள உதிரிக் குழுக்களால் “கட்டாய மதமாற்றம்” என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பின்னால் கல்வி வியாபாரத்தில் திளைக்கும் கல்வி மாஃபியாக்களின் சதி இருக்கலாம். இது குறித்து விசாரிக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையம் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்”
இவ்வாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments