Thursday, November 30, 2023
Home தமிழகம் மத வெறுப்பைப் பரப்புபவர்களைக் கைது செய்க - பழ. நெடுமாறன்

மத வெறுப்பைப் பரப்புபவர்களைக் கைது செய்க – பழ. நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பா.ச.க. செய்தி தொடர்பாளர்கள் மீதும், மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடுத்து அவர்களை கைது செய்ய மறுக்கும் இந்திய அரசின் போக்கினை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறு செய்தவர்களை எதிர்த்து நாடெங்கும் அமைதியான முறையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சியினை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்த்து போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இந்த அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே இத்தகைய போக்கு உதவும். சனநாயக சக்திகள் அனைத்தும் இணைந்து இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருமாறு வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments