தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக கோவையில் 11 பேருக்கும், சென்னையில் 10 பேருக்கும், திருப்பூரில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தொற்று பாதிப்பால் உயிர் பலி ஏதும் இல்லை’ என சுகாதாரத்துறை கூறியுள்ளது.